Sunday, December 15, 2013

பாரதி மெஸ்

இலால்குடி பினாத்தல்கள்

திருவல்லிக்கேணி என்றாலே நினைவுக்கு வருவது பார்த்தசாரதி கோவிலும், பாரதியார் இல்லமும்,மேன்ஷன்களும்தான். இந்த மேன்ஷன்களில் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் வேலை நிமித்தம் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அறை நன்றாக அமைகிறதோ என்னவோ சாப்பாட்டைப் பற்றி துளியும் கவலைப்படத் தேவையில்லை. திருவல்லிக்கேணியை Bachelor`s Paradise என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் இங்கு உள்ள தரமான உணவகங்களின் உணவு வகைகள். இங்கு சாப்பிடுவோருக்கு பாக்கெட்டிலோ,குடலிலோ ஓட்டை விழ வாய்ப்பில்லை.நான் சென்னைவாசியாகி ஜாகை பார்த்து மூன்று மாதம் கழித்துதான் புவனாவை கூட்டி வந்தேன்.அதுவரை என்னைப் பார்த்துக்கொண்டது மெஸ்கள்தான்.கைலாஷும்,என் தங்கை பையன் விக்னேஷும் வந்து என்னோடு ஒரு வாரம் தங்கியிருந்து `மாமா நீ நல்லா Bachelor Life`ஐ enjoy பண்றேன்னு certificate கொடுத்தான். சில நாட்களாகவே இந்த மெஸ்கள் குறித்து எழுதும் எண்ணம் இருந்தது.இப்போதுதான் முடிந்தது.

பாரதி மெஸ்- The Pride of Tiruvallikeni

நான் Triplicane வந்து இரண்டாம் நாள்தான் பாரதி மெஸ்-ஐ பார்த்தேன். இரண்டு இட்லியும்,வெண் பொங்கலும் சாப்பிட்டேன்.பொங்கலில் ஏகப்பட்ட முந்திரி. பாரதியின் சுத்தம் என்னைக் கவர்ந்தது.சற்றே கவனித்தபோதுதான் கடை ஒரு கொள்கையோடு [principle] நடத்தப்படுவது தெரிந்தது.சுவரெங்கும் பாரதியின் அந்த கால தனி மற்றும் குடும்பப் படங்கள். பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் பாரதி பாடல்கள்.அலமாரியில் தள்ளுபடி விலையில் பாரதி புத்தகங்கள்.`தங்களுக்குத் தேவையில்லாத புத்தகங்களை இங்கே கொண்டு வந்து போடவும்` என்று ஒரு corner.இவ்வாறாக எல்லாவற்றிலும் புதுமை பாரதியில்.பாரதியின் வெண்பொங்கலுக்கு லேசான போதை தரும் வல்லமை உண்டு. பொதுவாக எனக்கு பூரி என்றால் ரொம்பஅஅஅஅஅஅ இஷ்டம். அதனால்தான் `தங்க மீன்கள்` படத்தில் குழந்தை `இன்னிக்கு எங்க அம்மா பூரி செய்றாங்க.அதனால நாளைக்கு குளத்துல இறங்கறேன்`னு சொல்லும்போது என் கண்ணில் லேசான கலக்கம். நம்ம ஜாதி-ன்னு பாசம்.தமிழ் நாட்டில் உனக்குப் பிடித்த டிபன் என்ன என்று நான்கு குழந்தைகளை கேட்டால் மூன்று குழந்தைகளின் பதில் பூரியாகத்தான் இருக்கும். பூரி ஏன் செட்-ஆகத்தான் வருகிறது [ஓட்டலில்] என்று என் ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அந்த நாட்களில் பள்ளிகளில் பூரி செட்டுக்காகவே NCC-ல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்த கூட்டம் உண்டு. அந்த நாட்களில் எல்லாம் கல்யாணத்தில் பூரி மசால் போடும் பழக்கம் இல்லை.௨௦௦௦-த்தின் ஆரம்பத்தில் ஒரு கல்யாணத்தின் காலை டிபனில் பூரி மசாலை பதம் பார்த்தபின் மொய்க் கவரைப் பிரித்து மொய்யை அதிகப்ப்படுத்தினேன்.அந்த காலத்தில் சில ஓட்டல்களில் பூரி செட்டுக்கு மசால் வேண்டாம் சாம்பார் போதும் என்றால் `மூன்று பூரி`கொடுக்கும் ஒரு வழக்கம் அமுலில் இருந்தது.ஆனால் பூரிக்கு மசாலைத் தவிர வேறெதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்போது மைதா மாவினால் செய்யப்பட்டு [single-ஆக வரும்]உடலுக்கு எல்லா தீங்கையும் தரும் clone `சோலா பூரி`யை என்னால் ஏற்க முடியவில்லை.சரி பாரதிக்கு வருவோம்.பாரதியின் பூரி அப்பழுக்கிலாத அக்மார்க் ராகம்.கண் முன்னால் எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்டு கருப்பு துகள்கள் சற்றும் இல்லாதது.தொட்டுக்கொள்ள மசாலும் தேங்காய் சட்னியும்.பாரதியில் சாம்பார் சட்னி வகைகள் தேவையான அளவுதான்.extra கிடையாது.மதியம் சாப்பாடு உண்டு.தரமான சாப்பாடு 5௦ ரூபாய்க்கு கூட்டு காய் அப்பளம் சாம்பார் ரசம் மோர் வடை ஹாட்பேக்-ல் சாதம்.பார்சல் சாப்பாடு இலையுடன் 55 ரூபாய் சாதம் Horlicks pack போல அலுமினிய Foil-ல். இரவில் மீண்டும் டிபன் ரகங்கள். பாரதியின் சப்பாத்தியை தூக்கினால் அறுந்து விழுந்து விடும்.அவ்வளவு soft. தொட்டுக் கொள்ள கூட்டு.தயிர் வெங்காயம்,தக்காளி உருளை மசால்.[இங்கே 18 ரூபாய்.அருகிலுள்ள அடையாரில் இரண்டு சின்னது 45 ரூபாய். ஒரு முறை இரவு பாரதியில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மெஸ் உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்த நேரம்.எப்படி விலை உயர்த்தாமல் கட்டுபடியாகிறது என்று நான் கேட்க `லாபத்தில் நஷ்டம்`என அடக்கமாக பதிலளித்தார். பாரதியில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல உணவு.இங்கு self service-தான்.உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.இங்கு எட்டு மணிக்கு ஒரு நாள் வந்து மறு நாளும் எட்டு மணிக்கு வந்தால் முதல் நாள் பார்த்த முகங்களே முக்கால் வாசி இருக்கும்.புவனா ஊருக்கு போனால் காலை பாரதியில் இரண்டு இட்லி ஒரு பூரி செட் பக்கத்திலுள்ள சபரியில் ஒரு ஸ்ட்ராங் டீ என்பது என் வழக்கம்.பாரதியின் புது கிளை பாரதி பிறந்த நாளில் CNK- ரோடில் OPP  CHEPAUK-ல். பாரதி போன்ற உணவகங்களுக்கு அரசு பல சலுகைகளை தரலாம்.நான் சென்னையிலிருந்து மாற்றப்பட்டு பின் சென்னை வர நேரம்  போதெல்லாம் பாரதி வந்து கண்டிப்பாக ஒரு வேளை  சாப்பிடுவேன்.



















Monday, June 24, 2013

உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் எந்த அறிபறியுமில்லாமல் மெதுவாக brush-ல் பேஸ்ட்-ஐ போட்டுக்கொண்டு சேரில் உக்காந்து டிவி-ஐ on செய்தேன். உடன் ஒரு பெண் `உங்க பேஸ்டில் உப்பு இருக்கா?` என்று ஏதோ ரசம் குழம்பில உப்பு இருக்கா என்று கேட்பது போல கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி. `உப்பில்லா பண்டம் குப்பையில `என்று அந்த காலத்தில் பெரியவங்க சொன்னது பேஸ்ட்-க்கும் பொருந்துமா என்று குழம்பினேன். ஒரு வேளை பேஸ்ட்-ல்லாம் உப்பு போட்டுதான் தேய்க்கணுமா நம்ம பாட்டுக்கு வெறுமனேயே ரொம்ப நாளா தேய்க்கிறோமே என்று சந்தேகத்தில் tube முழுக்க தேடித் பாத்தா அப்படி ஒண்ணும் போடலை. இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் ஜிம்மிக்ஸ். ஏன்னா இப்பல்லாம் மக்களுக்கு loyalty இல்ல. மாத்திக்கிட்டே இருக்கணும்.ஒன்னே ஒண்ணுதான் மனுஷனால மாத்த முடியாது. அதனால்தான் ஒவ்வொரு கம்பெனிகாரனும் ஒரே பேர்ல லேசான பெயர் மாற்றத்துடன் வெவ்வேறு பற்பசைகளை உப்பு போட்டு சக்கரை போட்டு விக்கறானுங்க. உதாரணத்துக்கு Pepsodent, pepsodent-g, pepsodent 2 in 1, pepsodent total gumcare. colgate plain, colgate total, colgate gel, colgate germi check, colgate sensitive. 

என்ன பேஸ்டு-ங்க வந்தாலும் நம்ம  கோபால் பல்பொடிக்கு ஈடாகுமா? அந்த காலத்துல எங்க தாத்தா வீட்டுக்குப் போனா ஒரு பொட்டலம் கோபாலை எடுத்துக்கிட்டு அப்படியே தேய்க்கிற மாதிரி காலை டிபனா பொட்டலம் முழுசையும் வாயில கமுத்துடுவோம்.`இந்தியா. இலங்கை,மலேஷியா ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவை பெற்றது கோபால் பல்பொடி. உங்கள் பற்களை முத்து போல பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி`ன்னு ஆல் இந்தியா ரேடியோ வேறு ஒரு பக்கத்தில் முழங்கும் போது வாயில் எச்சில் ஊறும். அப்பல்லாம் ஊருல பாதி பய ரோஸ் விரலோடதான் ஸ்கூலுக்கு வருவானுங்க.ஆனா 1431 பயோரியா பல்பொடி-னு ஒன்னு இருக்கும். காரம் ரொம்ப இருக்கும். அந்த காலத்திலேயே பாருங்க 1431-னு registration நம்பரோட வித்திருக்கான்.இப்ப இருக்கிற Baskin Robbins @ 31 போல.நஞ்சன்கூடு-ன்னு ஒரு பல்பொடி வரும். காட்டம்தான். என்ன பேஸ்டில் உள்ள mouthwash பல்பொடியில இருக்காது. அப்ப பேஸ்ட்-னு பாத்தீங்கன்னா colgate-ம் forhans-ம் தான். பலபேரு அப்ப வேப்பங்குச்சிதான். இன்ஜெக்க்ஷன் பல்பொடி-னு ஒன்னு `ஆடும் பல் அசையாது` என்ற logo-வோடு வரும். அது உண்மையிலேயே ஈறுகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.பேஸ்ட் சோப் விஷயத்துல நம்ம நாட்டுக் கம்பெனிங்க பன்னாட்டு கம்பெனிகளிடம் தங்களது market ஷேர்-ஐ இழந்து வருடக் கணக்காகி விட்டது. அதனால்தான் அவன் ஆறு ரூபாய்க்கு பேஸ்ட் பண்ணி அதை இரண்டு ரூபாய்க் குழாயில் அடைத்து அதை இருபது ரூபாய் செலவு செய்து விளம்பரப் படுத்தி நம்மிடம் அறுபது ரூபாய்க்கு விற்கிறான். நான் எங்கள் வங்கியில் சில வருடங்கள் ஒரு co-op ஸ்டோருக்கு in-charge ஆக இருந்த போது ஒரு பைசா கூட சம்பாதிக்காத ஒரு ஊழியரின் வெத்து வேட்டு கணவர் `நான் மாசா மாசம் பிரஷ்-ஐ மாத்திடுவேன்`என்று சொன்னதும் எனது பறந்து விரிந்த பிரஷ்-ஐ அவனிடம் காண்பித்து இதை எப்ப மாத்தணும்-னு கேக்க ஆசையா இருந்தது.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு பாட்டி வந்தபோது பல் தேய்த்து விட்டு வந்து` நல்லா நுரை வருது. ஆனா வாயெல்லாம் எரியுது`ன்னார். அய்யோ பாட்டி எதுல தேச்சே-னு நாங்க கேட்க அவர் காண்பித்தது palmolive ஷேவிங் கிரீம். அதுலேர்ந்து பாட்டி பேரு `பாமாலிவ் பாட்டி`.

சோப்பு மேட்டர்-லயும் இதே கதைதான். Lifebuoy- சோப்ப ரெண்டா வெட்டிக்கொடுத்த பரம்பரையில வந்த நம்ம வாரிசுகள் இப்போ குளிப்பதோ dove சோப்பில்தான். சாதாரணமா ஒரு வாளித் தண்ணியில குளிக்கிறோம்னா dove-க்கு ரெண்டு வாளி. அவ்வளவு கொழ கொழா. அப்பல்லாம் சினிமா கொட்டாய்க்கு போனாதான் advertisement-லாம் பாக்கலாம்.`ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைபாய். லைபாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே.` `அழுக்கிலுள்ள கிருமிகளைக் கழுவிக் களைகிறது லைபாய் சோப்` அப்படினு அலறுவான். அப்போ எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வரும். அழுக்கிலுள்ள கிருமிகளைத்தான் கழுவி களையும் போல இருக்கு. அழுக்கு அப்படியே இருக்கும் போல-ன்னு. கார்பாலிக் சோப்பு-ங்கறதால லைபாய் கரையவே கரையாது.நுரையும் வராது.ரெண்டு மாசம் ஆனாலும் அப்பிடியே கல்லு கணக்கா இருக்கும். ஒரு முறை காது அடைத்துக்கொண்ட நண்பர் ஒருவரை டாக்டரிடம் அழைத்து சென்றபோது `என்ன சோப் use பண்றீங்க-ன்னு அவர் கேட்க இவர் சந்திரிகா என்றார்.நொறைனா உங்களுக்கு ரொம்ப பிடுக்குமா `என்று டாக்டர் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆமா சந்திரிகாவுல நுரை நிறையா வரும். ஆனா காரம் மூக்கில ஏறும்.பொம்மனாட்டிங்க சோப்பு போட்டு குளிக்கிற advertisement லாம் லிரில் சோப்பு வந்தப்புறம்தான்.அந்த அம்மா லா-ன்னு பாடிக்கிட்டு உற்சாகமா குளிக்கிறது இன்னும் காதிலேயே நிக்குது. இப்ப லிரில் இருக்கிற இடத்தைக் காணோம். புவனாவுடன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆன புதிதில் எங்கள் வீட்டுக்கு அவள் அண்ணன் வந்த போது பேச்சு வாக்கில் புவனா மைசூர் சாண்டல் சோப்-தான் use பண்ணுவா-ன்னு சொன்னவுடன் நான்`அய்யய்யோ சோப்பையெல்லாம் இங்க வந்தா மறந்துட சொல்லுங்க.இங்கெல்லாம் பயத்த மாவுதான்`-னு போட்டு விட்டவுடன் பார்ட்டி பயந்தே போயிட்டார். சில பேரு குழந்தைய பஜ்ஜி போண்டா-வுக்கு use பண்ற மாவையெல்லாம் போட்டு குளிப்பாட்டுவாங்க. ஜான்சன் பேபி சோப் போட்டு இப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்ரதில்ல. சில பெரியவங்க அதை போட்டு குளிக்கிறதானுலதான் அதுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கு. சோப் விஷயத்துல நன் ,கைலாஷ் லாயல்டி maintain பண்றோம்.நான் ஹமாம், அவன் பியர்ஸ் [ the only handmade soap-னு unilever சொல்லுவான். இப்ப எப்படியோ]. அப்பல்லாம் ஊருக்கு போறவன் எவன் சோப்பு பிரஷ் பேஸ்ட்-லாம் கொண்டு போவானுங்க. போற இடத்துல இருக்கிறத சந்தோஷத்தோட use பண்ணுவானுங்க.

பின் குறிப்பு: உங்க பேஸ்ட்-ல உப்பு இருக்கா-னு மிரட்டியவுடன் மிரட்சியோட டக்குனு சேனலை நான் மாத்தினா அதுல `உங்க உப்புல அயோடின் இருக்கா`னு ஒருவர் அலற அப்படியே சாஞ்சு உக்காந்துட்டேன்.