Sunday, December 15, 2013

பாரதி மெஸ்

இலால்குடி பினாத்தல்கள்

திருவல்லிக்கேணி என்றாலே நினைவுக்கு வருவது பார்த்தசாரதி கோவிலும், பாரதியார் இல்லமும்,மேன்ஷன்களும்தான். இந்த மேன்ஷன்களில் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் வேலை நிமித்தம் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அறை நன்றாக அமைகிறதோ என்னவோ சாப்பாட்டைப் பற்றி துளியும் கவலைப்படத் தேவையில்லை. திருவல்லிக்கேணியை Bachelor`s Paradise என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் இங்கு உள்ள தரமான உணவகங்களின் உணவு வகைகள். இங்கு சாப்பிடுவோருக்கு பாக்கெட்டிலோ,குடலிலோ ஓட்டை விழ வாய்ப்பில்லை.நான் சென்னைவாசியாகி ஜாகை பார்த்து மூன்று மாதம் கழித்துதான் புவனாவை கூட்டி வந்தேன்.அதுவரை என்னைப் பார்த்துக்கொண்டது மெஸ்கள்தான்.கைலாஷும்,என் தங்கை பையன் விக்னேஷும் வந்து என்னோடு ஒரு வாரம் தங்கியிருந்து `மாமா நீ நல்லா Bachelor Life`ஐ enjoy பண்றேன்னு certificate கொடுத்தான். சில நாட்களாகவே இந்த மெஸ்கள் குறித்து எழுதும் எண்ணம் இருந்தது.இப்போதுதான் முடிந்தது.

பாரதி மெஸ்- The Pride of Tiruvallikeni

நான் Triplicane வந்து இரண்டாம் நாள்தான் பாரதி மெஸ்-ஐ பார்த்தேன். இரண்டு இட்லியும்,வெண் பொங்கலும் சாப்பிட்டேன்.பொங்கலில் ஏகப்பட்ட முந்திரி. பாரதியின் சுத்தம் என்னைக் கவர்ந்தது.சற்றே கவனித்தபோதுதான் கடை ஒரு கொள்கையோடு [principle] நடத்தப்படுவது தெரிந்தது.சுவரெங்கும் பாரதியின் அந்த கால தனி மற்றும் குடும்பப் படங்கள். பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் பாரதி பாடல்கள்.அலமாரியில் தள்ளுபடி விலையில் பாரதி புத்தகங்கள்.`தங்களுக்குத் தேவையில்லாத புத்தகங்களை இங்கே கொண்டு வந்து போடவும்` என்று ஒரு corner.இவ்வாறாக எல்லாவற்றிலும் புதுமை பாரதியில்.பாரதியின் வெண்பொங்கலுக்கு லேசான போதை தரும் வல்லமை உண்டு. பொதுவாக எனக்கு பூரி என்றால் ரொம்பஅஅஅஅஅஅ இஷ்டம். அதனால்தான் `தங்க மீன்கள்` படத்தில் குழந்தை `இன்னிக்கு எங்க அம்மா பூரி செய்றாங்க.அதனால நாளைக்கு குளத்துல இறங்கறேன்`னு சொல்லும்போது என் கண்ணில் லேசான கலக்கம். நம்ம ஜாதி-ன்னு பாசம்.தமிழ் நாட்டில் உனக்குப் பிடித்த டிபன் என்ன என்று நான்கு குழந்தைகளை கேட்டால் மூன்று குழந்தைகளின் பதில் பூரியாகத்தான் இருக்கும். பூரி ஏன் செட்-ஆகத்தான் வருகிறது [ஓட்டலில்] என்று என் ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அந்த நாட்களில் பள்ளிகளில் பூரி செட்டுக்காகவே NCC-ல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்த கூட்டம் உண்டு. அந்த நாட்களில் எல்லாம் கல்யாணத்தில் பூரி மசால் போடும் பழக்கம் இல்லை.௨௦௦௦-த்தின் ஆரம்பத்தில் ஒரு கல்யாணத்தின் காலை டிபனில் பூரி மசாலை பதம் பார்த்தபின் மொய்க் கவரைப் பிரித்து மொய்யை அதிகப்ப்படுத்தினேன்.அந்த காலத்தில் சில ஓட்டல்களில் பூரி செட்டுக்கு மசால் வேண்டாம் சாம்பார் போதும் என்றால் `மூன்று பூரி`கொடுக்கும் ஒரு வழக்கம் அமுலில் இருந்தது.ஆனால் பூரிக்கு மசாலைத் தவிர வேறெதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்போது மைதா மாவினால் செய்யப்பட்டு [single-ஆக வரும்]உடலுக்கு எல்லா தீங்கையும் தரும் clone `சோலா பூரி`யை என்னால் ஏற்க முடியவில்லை.சரி பாரதிக்கு வருவோம்.பாரதியின் பூரி அப்பழுக்கிலாத அக்மார்க் ராகம்.கண் முன்னால் எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்டு கருப்பு துகள்கள் சற்றும் இல்லாதது.தொட்டுக்கொள்ள மசாலும் தேங்காய் சட்னியும்.பாரதியில் சாம்பார் சட்னி வகைகள் தேவையான அளவுதான்.extra கிடையாது.மதியம் சாப்பாடு உண்டு.தரமான சாப்பாடு 5௦ ரூபாய்க்கு கூட்டு காய் அப்பளம் சாம்பார் ரசம் மோர் வடை ஹாட்பேக்-ல் சாதம்.பார்சல் சாப்பாடு இலையுடன் 55 ரூபாய் சாதம் Horlicks pack போல அலுமினிய Foil-ல். இரவில் மீண்டும் டிபன் ரகங்கள். பாரதியின் சப்பாத்தியை தூக்கினால் அறுந்து விழுந்து விடும்.அவ்வளவு soft. தொட்டுக் கொள்ள கூட்டு.தயிர் வெங்காயம்,தக்காளி உருளை மசால்.[இங்கே 18 ரூபாய்.அருகிலுள்ள அடையாரில் இரண்டு சின்னது 45 ரூபாய். ஒரு முறை இரவு பாரதியில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மெஸ் உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்த நேரம்.எப்படி விலை உயர்த்தாமல் கட்டுபடியாகிறது என்று நான் கேட்க `லாபத்தில் நஷ்டம்`என அடக்கமாக பதிலளித்தார். பாரதியில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல உணவு.இங்கு self service-தான்.உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.இங்கு எட்டு மணிக்கு ஒரு நாள் வந்து மறு நாளும் எட்டு மணிக்கு வந்தால் முதல் நாள் பார்த்த முகங்களே முக்கால் வாசி இருக்கும்.புவனா ஊருக்கு போனால் காலை பாரதியில் இரண்டு இட்லி ஒரு பூரி செட் பக்கத்திலுள்ள சபரியில் ஒரு ஸ்ட்ராங் டீ என்பது என் வழக்கம்.பாரதியின் புது கிளை பாரதி பிறந்த நாளில் CNK- ரோடில் OPP  CHEPAUK-ல். பாரதி போன்ற உணவகங்களுக்கு அரசு பல சலுகைகளை தரலாம்.நான் சென்னையிலிருந்து மாற்றப்பட்டு பின் சென்னை வர நேரம்  போதெல்லாம் பாரதி வந்து கண்டிப்பாக ஒரு வேளை  சாப்பிடுவேன்.