Saturday, December 20, 2014

சாகித்ய அகாடமியின் சறுக்கல்

இந்த வருட சாகித்ய அகாடமி விருதுக்கு பூமணியின் அபத்த களஞ்சியம் 'அஞ்ஞாடி' தெரிவு செய்யப்பட்டுள்ள
து பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இது இமயம், கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்களுக்கு செய்யப்பட்ட பெரும் துரோகம். இரு வருடங்களுக்கு முன் இந்த ஆயிரம் பக்க புத்தக வாசிப்பு முடித்தவுடன் அது ஒரு பெரும் சலிப்பையும் நேர விரய ஆத்திரத்தையுமே கொடுத்தது. அத்துடன் சில நாட்களுக்கு புத்தகங்களை தொடவே அச்சமாக இருந்தது. கதையின் எந்த ஒரு கட்டத்திலும் மண்வாசனையோ அந்த நாளைய வாழ்க்கைச் சூழலோ சரியாக சொல்லபபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. புதிரை வண்ணார்களைப் பற்றிய சிறந்த கதை 'கோவேறு கழுதைகள்`தானே தவிர அஞ்ஞாடி அல்ல. இதை எந்த தமிழ் இலக்கியவாதியும் ஒத்துக்கொள்வான். நான் எந்த புத்தகத்தையும் படிக்க நீண்ட நாள் எடுத்துக்கொண்டதில்லை இதைத் தவிர. கதை நடுவில் பிறண்டு நடுவில் ஒரு சரித்திர பாட புத்தகம் படிப்பது போன்று இருந்தது. விருதுக்கு தகுதியான புத்தகங்களே ஒரு வருடத்தில் இல்லாது போனால் வழங்காமல் விட்டு விடலாமே. இமையத்தின் திமுக சார்பு நிலைப்பாடு அகாடமி அவருக்கு விருது கொடுப்பதை தடுக்கிறதோ? ஒரு காலத்திலும் அவர் அரசியலையும் இலக்கியத்தையும் கலந்ததில்லை. பார்க்கப் போனால் அவர் சார்ந்துள்ள கட்சியே அவரை கொண்டாடியிருக்க வேண்டும். அது நடக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment