சமீபத்தில் பதவி உயர்வு பெற்று Managaer [Branch Operations]-ஆக Madras University State Bank கிளையில் பொறுப்பெற்றுக் கொண்டது என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் எனக்கு அது பலவிதங்களில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தையே கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பேரிழப்பு என்று சொன்னால் என் பேர் சொல்லி கூப்பிடும் என் சக ஊழியர்களை முற்றிலுமாக இழந்து தனிமைப்படுத்தப் பட்டுவிட்டேன். Accountant என்ற பதவியின் பெயரால் மட்டுமே வங்கியில் ஊழியர்களாலும் வாடிக்கையாளர்களாலும் அழைக்கப்படுவது அவர்களிடமிருந்து ஒட்டாது விலகி இருக்கும் ஒரு உணர்வை உண்டாக்கி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு என்னை கொண்டு சென்று விட்டது. இப்படியே போனால் என் பேரே எனக்கு மறந்துவிடும் போலுள்ளது. அதுக்குதான் officer ஆனா visiting card-லாம் அடிச்சிக்கறாங்களோ? முரளி, முரளி சார், இலால்குடி முரளி சாரா என்று நாலு திசையிலும் திருச்சி கிளையில் ஒலித்த குரல்கள் பழங்கதையாகிவிட்டது. மேலும் பதவி உயர்வு இலக்கிய உலகினுடனான என் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டது என்றே சொல்லலாம். சிற்றிதழ்கள் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் திருவல்லிக்கேணி திருநெல்வேலி போளி ஸ்டால் போளி courier-ல் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு தனி. புத்தக கண்காட்சி அருகாமையில் தொடங்கிவிட்டது. வாங்க பணமிருந்தாலும் படிக்க நேரமில்லை. கண்டிப்பாக இந்த முறை வழக்கத்தைவிட அதிக புத்தகங்கள் வாங்கபோகிறேன் படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். கடல் காற்று ஒவ்வாமையால் சற்றே என் உடல்நலத்தையும் தொலைத்தேன். சென்னையில்தான் அடையாளத்தைத் தொலைத்து விட்டேன் என்று நினைத்தால் சொந்த ஊரிலும்தான். 20 ஆண்டுகள் நான் உருண்ட அறையை இழந்துவிட்டேன். இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு வந்தபொழுது 22 வருடம் வசித்த வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் வந்த உணர்வு இருந்தது. அப்பா அம்மா பக்கத்தில் இல்லாமல் 50 வயது குழந்தை ஏங்குகிறது என்று புவனா சென்னையில் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அவர்களும் அங்கு வந்தால்தான் ஒரு நிறைவு வரும். நம்பிக்கைதான். நடக்கும். இவ்வளவு மனக்கசப்பைக்கொடுக்கும் பதவி உயர்வு தேவையா? என்ன செய்வது. நானும் ஒரு பண விரட்டிதான். எல்லா வசதியும் கொடுக்கறாங்க.அனுபவிக்க நேரமில்லை. ஆசையில்லை. 24மணி நேரம் ஒரு நாளைக்கு என்பதை எப்படியாவது அதிகம் பண்ணச் சொல்ல வேண்டும்.
பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்வரை கடுமைமையான வேலைப்பளு. அதற்கு இரண்டு நாள் முன்னதாகத்தான் கைலாஷ் chicken-pox-ஆல் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு பத்து நாள் ஓய்விற்கு பின் கோவை கிளம்பி கல்லூரி சென்று அப்படியே பொங்கலுக்கு இலால்குடி வருவதாக திட்டம். முதலில் சமயபுரம் மட்டும் சென்று வருவதாய் இருந்த திட்டத்தை மாற்றி மேலும் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு வருடத்திற்கு மேல் போகாமல் விடுபட்டுப்போன குலதெய்வம் வைதீஸ்வரன்கோ விலுக்கும் போக முடிவெடுத்து எல்லாவற்றையும் மாற்றியமைத்தேன். திட்டமிட்டபடியே எல்லா நடக்க வைத்தீஸ்வரன்கோவில் போய் திரும்பி இலால்குடி நெருங்கையில் நெற்றிப்பொட்டில் ஊசி குத்துவது போன்ற ஒரு உணர்வு. வீட்டுக்கு வந்து முகம் கழுவியபின் முகத்தை கண்ணாடியில் பார்க்கையில் நெற்றி முழுவதும் சிறுசிறு வேர்க்குரு போன்று இருந்தன. முதுகும் சற்று அரிக்க புவனாவும் கைலாஷும் அம்மை என்று உறுதி செய்தனர். மேனேஜர் முதலிலேயே சொன்னபடி தடுப்பு ஊசி போடாத தவறை உணர்ந்தேன். சரி மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம் என உடன் யோசித்தேன்.சென்னை போய்விடலாமா? முடியுமா?விடுவார்களா? ஒரு வழியாக மாடி அறையில் quarantine-ல் இருக்க முடிவெடுத்தேன்.
அடுத்த நாள் காலை மேனேஜர்-க்கு தொலைபேசிவிட்டு கைலாஷ் ஆலோசனைப் படி Dr.சத்தியநாதனை சந்தித்து தீவிரத்தை குறைக்க முடிவெடுத்தேன். அவரும் Chicken-pox என உறுதி செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். புவனாவிற்கு வராமல் இப்போது தடுப்பூசி போட்டால் பலனிருக்காது என்பதையும் தெரிவித்தார். கைலாஷுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் நமக்கும் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக அம்மையின் தீவிரம் அதிகமாகி அடுத்த நாள் மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்குள் slip-ஆகி சென்றேன்.பசி தூக்கம் மறந்தேன் அடியோடு. கடும் உடல் வலி. தலை முதல் கால் முட்டி வரை மகமாயியின் தீவிர விளையாடல்.பிழைப்பதே கடினமோ என்ற எண்ணம் வேறு என்னுள். இந்த நேரங்களில் புவனாவின் மன உறுதியும்,கவனிப்பும்தான் என்னை சற்றே ஆசுவாசப்படுத்தும்.
நான்காம் நாள் நல்ல இரவுத் தூக்கதிற்குபின் விழித்த எனக்கு ஒரு புத்துணர்வு பாய்ந்தது போன்ற உற்சாகம். சற்று நேரத்தில் அகோரப் பசி. ஒரு சில இட்லிகளை விழுங்கியபின் மதியம் நல்ல பசியில் ரசம் மற்றும் மோர்சாதம். உள் அளவில் பழைய உற்சாகம் மீண்டும்.வெளித்தோற்றமோ மற்றவர்களை பயங்கொள்ளச்செய்யும் நிலை.
புதனன்று முதல் தண்ணீர் என்று அம்மாவும் புவனாவும் முடிவு செய்து காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலைகொத்துகளை போட்டு இயற்கையாக நீரை சூடுபடுத்தும் பணியில் இறங்கினர். மதியம் ஒருமணி வாக்கில் ஒரு பாத்திரத்தில் பாதம் பாயாசத்தை ஒத்த திரவத்தையும் [ பருத்திப் பால்-தழும்புகளை உடன் மறையச் செய்ய ] மற்றொரு கிண்ணத்தில் பச்சையாக நல்ல வாசனையோடு சரவண பவன் சட்னியை நினைவு படுத்தும் கலவையையும் ஒப்படைத்து நன்றாக உடலில் தடவி சற்றே ஊறியபின் குளிக்க சொன்னார்கள்.அப்படியே துணியில் வார்த்த இட்லி ரெண்டு கொடுத்தா உள்ளே உடறேன்னு சொன்னேன். எப்பவுமே எனக்கு துணியில் வார்த்த இட்லிதான் பிடிக்கும்.அதன் clone-ஆன வழவழ-ன்னு இருக்கும் குக்கர் இட்லியை கண்டால் எனக்கு ஆகவே ஆகாது. பின்னர் கைபேசியில் நண்பர் சேகருடன் பேசும்போது `இப்போது நான் படுத்திருப்பது.நீ காலில் அடிபட்டு படுத்தது இதெல்லாம் நமக்கு ஒருவகை forced ரெஸ்ட்-தான்.இல்லாவிட்டால் நாம ஓடிக்கிட்டேதான் இருப்போம்`னு சொன்னேன்.
என்ன புத்தகக் கண்காட்சிக்கு போக போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடி. நல்ல வேளை.கடைசி நாள் சென்ற நண்பருக்கு கைபேசி வாங்க உத்தேசித்த புத்தகப் பட்டியலை சொல்ல அவர் அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.
வெள்ளை யானை- ஜெயமோகன்
அஜ்னபி - மீரான் மைதீன்
தூப்புக்காரி- மலர்வதி
வெலிங்டன் - சுகுமாரன்
பூக்குழி- பெருமாள் முருகன்
மரப்பல்லி- வா.மு.கோமு
ஜின்னாவின் டயரி - கீரனூர் ஜாகிர்ராஜா
இந்த முறை புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் காலச்சுவடால் வெளியிடப்பட்ட மருதுவின் கைவண்ணத்திலான பெண் ஆளுமைகளின் காலண்டர்.
இப்படியே மேலும் ஐந்து நாள் ஓய்விற்குப்பின் திங்கள் சென்னை திரும்பினோம்.30 அன்று முதல் வங்கிக்கு செல்ல முடிவு.
அடுத்த நாள் காலை மேனேஜர்-க்கு தொலைபேசிவிட்டு கைலாஷ் ஆலோசனைப் படி Dr.சத்தியநாதனை சந்தித்து தீவிரத்தை குறைக்க முடிவெடுத்தேன். அவரும் Chicken-pox என உறுதி செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். புவனாவிற்கு வராமல் இப்போது தடுப்பூசி போட்டால் பலனிருக்காது என்பதையும் தெரிவித்தார். கைலாஷுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் நமக்கும் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக அம்மையின் தீவிரம் அதிகமாகி அடுத்த நாள் மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்குள் slip-ஆகி சென்றேன்.பசி தூக்கம் மறந்தேன் அடியோடு. கடும் உடல் வலி. தலை முதல் கால் முட்டி வரை மகமாயியின் தீவிர விளையாடல்.பிழைப்பதே கடினமோ என்ற எண்ணம் வேறு என்னுள். இந்த நேரங்களில் புவனாவின் மன உறுதியும்,கவனிப்பும்தான் என்னை சற்றே ஆசுவாசப்படுத்தும்.
நான்காம் நாள் நல்ல இரவுத் தூக்கதிற்குபின் விழித்த எனக்கு ஒரு புத்துணர்வு பாய்ந்தது போன்ற உற்சாகம். சற்று நேரத்தில் அகோரப் பசி. ஒரு சில இட்லிகளை விழுங்கியபின் மதியம் நல்ல பசியில் ரசம் மற்றும் மோர்சாதம். உள் அளவில் பழைய உற்சாகம் மீண்டும்.வெளித்தோற்றமோ மற்றவர்களை பயங்கொள்ளச்செய்யும் நிலை.
புதனன்று முதல் தண்ணீர் என்று அம்மாவும் புவனாவும் முடிவு செய்து காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலைகொத்துகளை போட்டு இயற்கையாக நீரை சூடுபடுத்தும் பணியில் இறங்கினர். மதியம் ஒருமணி வாக்கில் ஒரு பாத்திரத்தில் பாதம் பாயாசத்தை ஒத்த திரவத்தையும் [ பருத்திப் பால்-தழும்புகளை உடன் மறையச் செய்ய ] மற்றொரு கிண்ணத்தில் பச்சையாக நல்ல வாசனையோடு சரவண பவன் சட்னியை நினைவு படுத்தும் கலவையையும் ஒப்படைத்து நன்றாக உடலில் தடவி சற்றே ஊறியபின் குளிக்க சொன்னார்கள்.அப்படியே துணியில் வார்த்த இட்லி ரெண்டு கொடுத்தா உள்ளே உடறேன்னு சொன்னேன். எப்பவுமே எனக்கு துணியில் வார்த்த இட்லிதான் பிடிக்கும்.அதன் clone-ஆன வழவழ-ன்னு இருக்கும் குக்கர் இட்லியை கண்டால் எனக்கு ஆகவே ஆகாது. பின்னர் கைபேசியில் நண்பர் சேகருடன் பேசும்போது `இப்போது நான் படுத்திருப்பது.நீ காலில் அடிபட்டு படுத்தது இதெல்லாம் நமக்கு ஒருவகை forced ரெஸ்ட்-தான்.இல்லாவிட்டால் நாம ஓடிக்கிட்டேதான் இருப்போம்`னு சொன்னேன்.
என்ன புத்தகக் கண்காட்சிக்கு போக போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடி. நல்ல வேளை.கடைசி நாள் சென்ற நண்பருக்கு கைபேசி வாங்க உத்தேசித்த புத்தகப் பட்டியலை சொல்ல அவர் அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.
வெள்ளை யானை- ஜெயமோகன்
அஜ்னபி - மீரான் மைதீன்
தூப்புக்காரி- மலர்வதி
வெலிங்டன் - சுகுமாரன்
பூக்குழி- பெருமாள் முருகன்
மரப்பல்லி- வா.மு.கோமு
ஜின்னாவின் டயரி - கீரனூர் ஜாகிர்ராஜா
இந்த முறை புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் காலச்சுவடால் வெளியிடப்பட்ட மருதுவின் கைவண்ணத்திலான பெண் ஆளுமைகளின் காலண்டர்.
இப்படியே மேலும் ஐந்து நாள் ஓய்விற்குப்பின் திங்கள் சென்னை திரும்பினோம்.30 அன்று முதல் வங்கிக்கு செல்ல முடிவு.







