Friday, February 7, 2014

அடையாளம் துறந்தவன்



சமீபத்தில் பதவி உயர்வு பெற்று Managaer [Branch Operations]-ஆக Madras University State Bank கிளையில் பொறுப்பெற்றுக் கொண்டது என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் எனக்கு அது பலவிதங்களில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தையே கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பேரிழப்பு என்று சொன்னால் என் பேர் சொல்லி கூப்பிடும் என் சக ஊழியர்களை முற்றிலுமாக இழந்து தனிமைப்படுத்தப் பட்டுவிட்டேன். Accountant என்ற பதவியின் பெயரால் மட்டுமே வங்கியில் ஊழியர்களாலும் வாடிக்கையாளர்களாலும் அழைக்கப்படுவது அவர்களிடமிருந்து ஒட்டாது விலகி இருக்கும் ஒரு உணர்வை உண்டாக்கி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு என்னை கொண்டு சென்று விட்டது. இப்படியே போனால் என் பேரே எனக்கு மறந்துவிடும் போலுள்ளது. அதுக்குதான் officer ஆனா visiting card-லாம் அடிச்சிக்கறாங்களோ? முரளி, முரளி சார், இலால்குடி முரளி சாரா என்று நாலு திசையிலும் திருச்சி கிளையில் ஒலித்த குரல்கள் பழங்கதையாகிவிட்டது. மேலும் பதவி உயர்வு இலக்கிய உலகினுடனான என் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டது என்றே சொல்லலாம். சிற்றிதழ்கள் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் திருவல்லிக்கேணி திருநெல்வேலி போளி ஸ்டால் போளி courier-ல் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு தனி. புத்தக கண்காட்சி அருகாமையில் தொடங்கிவிட்டது. வாங்க பணமிருந்தாலும் படிக்க நேரமில்லை. கண்டிப்பாக இந்த முறை வழக்கத்தைவிட அதிக புத்தகங்கள் வாங்கபோகிறேன் படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். கடல் காற்று ஒவ்வாமையால் சற்றே என் உடல்நலத்தையும் தொலைத்தேன். சென்னையில்தான் அடையாளத்தைத் தொலைத்து விட்டேன் என்று நினைத்தால் சொந்த ஊரிலும்தான். 20 ஆண்டுகள் நான் உருண்ட அறையை இழந்துவிட்டேன். இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு வந்தபொழுது 22 வருடம் வசித்த வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் வந்த உணர்வு இருந்தது. அப்பா அம்மா பக்கத்தில் இல்லாமல் 50 வயது குழந்தை ஏங்குகிறது என்று புவனா சென்னையில் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அவர்களும் அங்கு வந்தால்தான் ஒரு நிறைவு வரும். நம்பிக்கைதான். நடக்கும். இவ்வளவு மனக்கசப்பைக்கொடுக்கும் பதவி உயர்வு தேவையா? என்ன செய்வது. நானும் ஒரு பண விரட்டிதான். எல்லா வசதியும் கொடுக்கறாங்க.அனுபவிக்க நேரமில்லை. ஆசையில்லை. 24மணி நேரம் ஒரு நாளைக்கு என்பதை எப்படியாவது அதிகம் பண்ணச் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment